வாகனம் மோதி மூதாட்டி பலி

 

தர்மபுரி, ஏப்.29:பாலக்கோடு சிக்கதோரணபெட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாதப்பன் மனைவி சென்னம்மாள் (65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், சென்னம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடும் போது, ஒகேனக்கல்-பென்னாகரம் சாலையில் வாகனம் மோதிய நிலையில், சென்னம்மாள் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இந்த தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை