வாகனம் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஜூலை 2: சூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரப்பா, தொழிலாளி. இவர் கடந்த 17ம் தேதி, கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி முருகன் கோயில் அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் ஈஸ்வரப்பா உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை