பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இறந்த குரங்கை மனிதாபிமானத்துடன் காவலர்கள் குழி தோண்டி புதைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் பகுதியில் ஒரு குரங்கு தனது குட்டியுடன் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. அந்த வழியாக வந்த காவலர்கள் சங்கரபாண்டியன், சண்முகம் ஆகியோர் இறந்து கிடந்த குரங்கினை எடுத்து அருகில் உள்ள இடத்தில் குழி தோண்டி புதைத்தனர். இந்த செயலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து பாராட்டிச் சென்றனர்….