வேப்பூர், செப். 11: வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லவேல் மகன் செல்வகுமார்(20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு வீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தனது நண்பனை சந்திக்க நேற்று காலை 8 மணியளவில் செல்வக்குமார் இருசக்கர வாகனத்தில் சேலம் – விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் என்.நாரையூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேப்பூர் போலீசார் வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.