வானூர், ஜூலை 7: வானூர் தாலுகா பெரம்பை அருகே உள்ள வாழப்பட்டாம்பாளையம் பகுதியில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனி அருகே மறைந்திருந்த 5 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர், அதில், அவர்கள் அப்பகுதி வழியாக வருபவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து பட்டானூர் பகுதியை சேர்ந்த உதயராஜ்(31), அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலு(35), சண்முகம்(21), புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த அருண்குமார்(21), கார்த்திக்(30) ஆகிய 5 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்