மதுரை, செப். 14: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டதாகவும் வழக்கு பதிவானது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சாட்டை துரைமுருகன், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் எனக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.