ஷில்லாங்: வழக்கற்று போன 1,500 சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதுகுறித்து சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு நேற்று முன்தினம் கூறுகையில்,‘‘தொன்மையான சட்டங்கள் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்துவதாகவும், இன்றைய காலத்துக்கு தொடா்பில்லாதவையாகவும் இருக்கின்றன. மக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்க வேண்டும் என்பதும் அவர்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பது பிரதமா் மோடியின் விருப்பம். அதனடிப்படையில், வழக்கற்றுப் போன அனைத்து சட்டங்களையும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிற தேவையற்ற சட்டங்களை நீக்க ஒன்றிய பாஜ அரசு தீா்மானித்து உள்ளது. அதன்படி, வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 1,500க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதே போன்ற சட்டங்களை ரத்து செய்ய தயார். வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி விடக்கூடாது. அதற்காக அந்த பிராந்தியத்துக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்….