சென்னை: மாநில அளவிலான வல்லுநர் குழுவில் இருந்து ஓய்வுபெற்ற மத்திய தொல்லியல் துறை வல்லுநர் மூர்த்தீஸ்வரி நீக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாநில அளவிலான வல்லுநர் குழுவில் உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற மத்திய தொல்லியல் துறை வல்லுநர் மூர்த்தீஸ்வரி நிர்வாக காரணங்களுக்காக குழுவில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறார்’ என கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு சோதனையைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….