வரும் 26ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஜூன் 20: வரும் 26ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. ஈரோடு வருவாய் கோட்டத்துக்குட்பட்ட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஈரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ சதீஸ்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட தாலுகாக்களுக்குட்பட்ட விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலமாகவும், நேரில் தெரிவித்தும் தீர்வு பெறலாம். இத்தகவலை ஆர்.டி.ஓ சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்