சிவகங்கை, செப். 20: சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் வருமானவரித் துறை சார்பில் வருமான வரி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் கணேசன் வரவேற்றார். வருமான வரித்துறை அதிகாரிகள் சுப்பிரமணியன், சந்திரசேகரன், பெருமாள் ஆகியோர் வருமான வரியின் அடிப்படை, வரி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் வருமான வரியின் பங்கு ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினர். தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விடையளித்தனர். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நஏற்பாடுகளை பேராசிரியர் சேவுகன் செய்தார். பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார்.