வருசநாடு அருகே பட்டா வழங்க விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு, நவ. 6: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கராஜபுரம் பசுமலைதேரி போன்ற பகுதிகளில் 170க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த விவசாய நிலங்கள் அனைத்தும் பூமிதான போர்டு மூலம் இயங்கி வருகிறது. இதற்கென்று கணினி சிட்டா, கணினி பட்டா இல்லாமல், இலவச மின்சாரம், பண்ணைக்குட்டை, மண்வரப்பு வங்கிக் கடன்கள், கூட்டுறவு சொசைட்டிகளில் கடன்கள் என எதுவும் பெறமுடியாமல் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் பரிதவித்து வருகிறார்கள்.

ஆகையால் பூமிதான விவசாயிகள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பூமிதான விவசாயி மகாலிங்கம் கூறுகையில், மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் நலன் காத்து பூமிதான விவசாயிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டும். இல்லையெனில் வருகின்ற காலங்களில் கிராம அலுவலக நிர்வாகத்தில் அடங்கல் வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும், என்றார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை