வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

தர்மபுரி: பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பெயிண்டரான இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கோவிந்தராஜ் வரதட்சணை கேட்டு, சத்யாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் 2 சென்ட் நிலத்தை எழுதி வைத்துள்ளனர். இதன் பின்னரும், கோவிந்தராஜ் தகராறு செய்து வந்ததால், வாழ்க்கையில் விரக்தியடைந்த சத்யா, நேற்று அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து சத்யாவின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்