தர்மபுரி: பென்னாகரம் அருகே மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பெயிண்டரான இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கோவிந்தராஜ் வரதட்சணை கேட்டு, சத்யாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் 2 சென்ட் நிலத்தை எழுதி வைத்துள்ளனர். இதன் பின்னரும், கோவிந்தராஜ் தகராறு செய்து வந்ததால், வாழ்க்கையில் விரக்தியடைந்த சத்யா, நேற்று அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து சத்யாவின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.