வத்திராயிருப்பு அருகே விசாரணைக்கு சென்றபோது போலீஸ் சீருடையுடன் மது அருந்திய எஸ்எஸ்ஐ: சமூக வலைத்தளங்களில் வைரல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு எஸ்எஸ்ஐ விசாரணைக்கு சென்றபோது, பொது இடத்தில் சீருடையுடன் அமர்ந்து மது அருந்தும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிபவர் கந்தசாமி. இவர், ஒரு புகார் தொடர்பான விசாரணைக்காக நேற்று முன்தினம் கோட்டையூர் சென்றார். அதனை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, மாத்தூர் செல்லும் விலக்கில், பொது இடத்தில் கழிப்பறை அருகே சீருடையுடன் அமர்ந்து வாழைப்பழம், தண்ணீர் பாட்டிலை வைத்து மது அருந்தியுள்ளார். அவர் மது அருந்துவதை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சீருடையுடன் அவர் மது அருந்தும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரன் உத்தரவின்பேரில், திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் எஸ்எஸ்ஐ கந்தசாமியிடம் விசாரித்து வருகின்றனர்….

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி