வத்திராயிருப்பில் டிராக்டர் மீது டூவீலர் மோதி மாணவி பலி

வத்திராயிருப்பு, ஜன. 1: வத்திராயிருப்பில் டிராக்டர் மீது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி பலியானார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர்கள் மகாலட்சுமி (16), மணிபாரதி (16). பிளஸ் 1 மாணவிகளான இருவரும் நேற்றுமுன் தினம் டூவீலரில் தாணிப்பாறை – வத்திராயிருப்பு சாலையில் சென்றனர். டூவீலரை மாணவி மகாலட்சுமி ஓட்டினார்.

ஆகாசம்பட்டி பகுதியில் சென்ற போது, சாலையோரம் நினைறிருந்த டிராக்டர் மீது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவிகள் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்