வணிக வளாக கடையின் மேற்கூரை சிமென்ட் பெயர்ந்து விழுந்தது

ஆர்.எஸ்.மங்கலம், அக்.31: ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி வணிக வளாக கடையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் மேற்கூரை மற்றும் சிலாப்புகளில் ஏற்பட்டிருந்த சிறு,சிறு சிமெண்ட் காரை பெயர்ந்திருந்தது. இதை சில நாட்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பழுது நீக்கம் செய்தனர். இந்நிலையில் இரவு பூட்டி சென்ற கடையை திறந்து பார்த்த பொழுது மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து கடையில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் அறிந்து பார்வையிட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக மேற்கூரையை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இதுபோன்று மற்ற கடைகளிலும் நடைபெற்று விடாமல் அனைத்து கடைகளின் உட்பகுதிகளையும் பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். பழுது இருப்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை