வடுகபாளையம் பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டி ரயில் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணி தீவிரம்

பொள்ளாச்சி :  கோவையிலிருந்து பொள்ளாச்சி வரையிலான அகல ரயில் பாதையில், மின்மயமாக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்ததால், அந்த வழித்தடத்தில் அவ்வப்போது மின்சார ரயில் அதிவேகத்துடன் சோதனையோட்டமாக இயக்கப்படுகிறது. தற்போது பொள்ளாச்சியிலிருந்து பழனி மற்றும் பாலக்காடு வரையிலும் மின் மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில், மின்மயமாக்கப்பட்ட, அகல ரயில்பாதை வழித்தடத்தில் தண்டவாள பகுதியை மேலும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, பொள்ளாச்சி-கோவை வழித்தட தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிய நிலையில் கிடந்த ஜல்லி கற்களை, சுழற்சி முறையில் சமப்படுத்துவதுடன், மணலை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது.நவீன ராட்சத இன்ஜின் பொருந்திய இயந்திரம் மூலம், தண்டவாளத்தில் ஜல்லி கற்களை சுழற்சி முறையில் பரப்பி போட்டு உறுதிப்படுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. நேற்று வடுகபாளையம் பகுதியில், தண்டவாளத்தை உறுதிப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன் மூலம், அதிவேகமாக வரும் மின்சார ரயில், எந்தவித சிரமமின்றி விரைந்து கடந்து செல்வதற்கு வழிவகுக்கும் எனவும், சுமார் 10ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் ஜல்லி பரப்பி போட்டு தண்டவாளம் உறுதிப்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது!

பந்தலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை: வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை