வடமதுரை அருகே இளம்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை

வடமதுரை, செப். 19: வடமதுரை அருகே திருமணமான ஓராண்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஷோபா ஹரிணி (18). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. ஷோபா ஹரிணி கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஷோபா ஹரிணியின் தாய் செல்வராணி அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்