வடசேரியில் ₹5 லட்சத்தில் சாலை பணி

நாகர்கோவில், ஜன.14: நாகர்கோவில் வடசேரியில் ₹5 லட்சத்தில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 13வது வார்டு கனகமூலம் பள்ள தெருவில் ₹5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைமேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் ஆச்சியம்மாள், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்