வடசேரியில் முன் அறிவிப்பின்றி மறியல் 30 பேர் மீது வழக்கு

தோகைமலை, மார்ச் 30: தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி வடசேரி 3 ரோடு பேருந்து நிறுத்தம் அருகே, வடசேரியில் குடிநீர் வரவில்லை என்ற காரணத்திற்காக எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் செய்து உள்ளனர். இதனை அடுத்து எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வடசேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் செய்த சங்கப்பிள்ளை, பாலசுப்ரமணி, வேலு, கதிர்வேல், தங்கவேல், ரம்யா, உஷா உள்பட 10 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 30 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்