வடக்கு கொரட்டூரில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பேன்: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் வாக்குறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம் 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் போட்டியிடுகிறார். இவர், நேற்று வடக்கு கொரட்டூர் பகுதிகளான டி.வி.எஸ் நகர், அன்னை நகர், வாட்டர் கெனால் ரோடு ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் உஷா நாகராஜ் கூறுகையில், `அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் வடக்கு கொரட்டூர் பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பேன்’ என்றார். இந்த வாக்குசேகரிப்பின்போது, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்டச்செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், பகுதி நிர்வாகிகள் பொற்செழியன், ராஜ்குமார், பாபு இளஞ்செழியன், லெட்சுமி, மோகன்குமார், முருகன், பிரகாசம், கோவிந்தன், தவமணி, கிருஷ்ணன், எம்.டில்லிபாபு, முத்து, செல்வம், அமிர்தலிங்கம் சிவராமன், கு.டில்லிபாபு ஸ்ரீநாத், ஜெயபால், கண்ணன், திருநாவுக்கரசு, உஷா, தரணி, காங்கிரஸ் நிர்வாகிகள் லோகநாதன், அசோக்குமார், செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்