வஉசி பிறந்தநாள் விழா: வேடசந்தூர் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை

வேடசந்தூர், செப். 6: வேடசந்தூர் பஸ் நிலையம் முன்பாக நேற்று திமுகவின் சார்பாக வஉசியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய குழு தலைவர் சௌடேஸ்வரி கோவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் தாமரைச்செல்வி முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட விவசாய அணி மருதபிள்ளை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை