லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

பூந்தமல்லி: திருவேற்காட்டை சேர்ந்தவர் அந்தோணி கவின்(29), டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் தாம்பரம் – மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தார். வானகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்தோணி கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தோணி கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து லாரி டிரைவர் செல்வராஜ்(30), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்