Friday, September 20, 2024
Home » லாரி மீது கார் மோதி 2 இன்ஜினியர்கள் பலி

லாரி மீது கார் மோதி 2 இன்ஜினியர்கள் பலி

by kannappan

பல்லாவரம், மார்ச் 13: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (37), விஜயபரணி (39), பரத்ராஜ் (27). இவர்கள் 3 பேரும் அதே மாநிலத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், வார விடுமுறை நாளை கொண்டாட நேற்று தெலங்கானாவில் இருந்து 3 பேரும் பாண்டிச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். பரத்ராஜ் காரை ஓட்டினார். காரின் பின் இருக்கையில் நண்பர்கள் இருவரும் அமர்ந்து இருந்தனர். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே கார் சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் லாரி மீது, கார் பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கிய கார்த்திக் மற்றும் விஜயபரணி ஆகிய இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.காரை ஓட்டிவந்த பரத்ராஜ் காயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரின் கதவுகளை கடப்பாரையால் உடைத்து, இருவரின் உடல்களையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். …

You may also like

Leave a Comment

3 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi