லாரி மீது அரசு பஸ் மோதல் கண்டக்டரின் கால் முறிந்தது

 

சேலம், ஜூலை 17: அரியலூரில் இருந்து மேட்டூருக்கு சாம்பல் ஏற்றிச் செல்ல ஒரு லாரி வந்தது. லாரியை டிரைவர் பூபதி ஓட்டிவந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் லாரி வந்தது. அப்போது, லாரிக்கு பின்னால் கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் வந்தது. அரசு பஸ்சை எடப்பாடியை சேர்ந்த டிரைவர் குமார்(42) இயக்கி வந்துள்ளார்.

லாரியை பஸ் முந்தி சென்றது. அப்போது லாரி மீது பஸ் உரசியது. இந்த விபத்தில் பஸ் கண்டக்டரான அந்தியூரை சேர்ந்த ஜெகதீஸ்வரனின் கால் முறிந்தது. 8பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது