லாட்டரிச்சீட்டு விற்றவர் மீது வழக்குப்பதிவு

கூடலூர், அக்.22: நீலகிரி மாவட்டம், ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (86). இவர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் பேரில் எஸ்ஐ கபில்தேவ் மற்றும் போலீசார் கூடலூர் தேவர்சோலை சாலை ஆட்டோ நிறுத்த பகுதியில் நின்றிருந்த நாராயணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அண்டை மாநிலத்தில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.  அவரிடமிருந்த 102 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி