ரோல்பால் போட்டி பரிசளிப்பு விழா

காரைக்குடி, ஜூலை 10: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியும், சாய் அமெச்சூர் ரோல் பால் ராக்கர்ஸ் சார்பில் ரோல்பால் போட்டி நடந்தது. செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி முன்னாள் துணைவேந்தர், கல்விகுழும ஆலோசகர் பேராசிரியர் எஸ்.சுப்பையா பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் தடைகளை தாண்டி முயற்சி செய்தால் வெற்றி என்பது அனைவருக்கும் சாத்தியமாகும்.

போட்டியில் மகளிர் பிரிவில் செயின்ட் மிக்கேல் ஸ்போர்ட்ஸ் அகாடமி முதல் இடம், செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 2ம் இடம் பெற்றது. ஆண்கள் பிரிவில் செயின்ட் மிக்கேல் ஸ்போர்ட்ஸ் அகாடமி முதல் இடம், செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 2ம் இடம், காரை ஸ்போர்ட்ஸ் அகாடமி 3ம் இடம் பெற்றது. நிகழ்ச்சியில் ரோல் பால் மதுரை மாவட்ட தலைவர் ராபின் ராஜகாந்தன், இன்டர்நேஷனல் ரோல்பால் பயிற்சியாளர் தவேந்திரன், வித்யாசாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் வைத்தீஸ்குமார் நன்றி கூறினார். ராஜராஜன் பொறியியல் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்