ரைஸ் மில்லில் புகுந்த 6 அடி சாரை

திருவில்லிபுத்தூர், ஜூன் 8: திருவில்லிபுத்தூரில் ரைஸ் மில்லில் புகுந்த 6 அடி சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரைஸ் மில்லில் சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பு நேற்று புகுந்தது. பாம்பை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த ரைஸ் மில் ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ரைஸ்மில்லுக்குள் புகுந்து மறைந்திருந்த சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்