ரேஸர்பே, கேஷ்ப்ரீக்கு ரிசர்வ் வங்கி தடை

புதுடெல்லி: ரேஸர்பே,கேஷ்ப்ரீ நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி  தடை விதித்துள்ளது. கட்டணம் செலுத்தும் சேவை வழங்கும் நிறுவனங்களான ரேஸர்பே, கேஷ்ப்ரீ  போன்றவை புது வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு  தடை விதித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது.  ரேஸர்பே வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த ஜூலையில் உரிமம் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. தற்போது  உரிமம் வழங்குவதற்கான இறுதி கட்ட பரிசீலனை நடந்து வருகிறது. அது தொடர்பாக சில விவரங்களை  ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. அதுவரை வாடிக்கையாளர்கள் சேர்க்க  தடை விதித்துள்ளது. எனினும் ரேஸர்பேயின் இதர சேவைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. கேஷ்ப்ரீ நிறுவனம் சார்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை….

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்