போச்சம்பள்ளி, ஜூலை 6: கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்பு துறை உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமையில், போலீசார் நாகரத்தினம், தட்சணாமூர்த்தி ஆகியோர், மத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவம்பட்டியை நோக்கி வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டையைச் சேர்ந்த சிவா (23), மற்றும் சுதர்சன் (22)ஆகிய 2பேரை கைது செய்து 50மூட்டை ரேஷன் அரிசி, டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.