ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

தொண்டி, ஜூலை 4: தொண்டி பகுதிகளில் நியாய விலை கடை தணிக்கைக்கு நேற்று முன்தினம் திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம் மற்றும் அமுதன் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொண்டி தெற்கு தெருவில் 25 கிலோ கொண்ட 35 பிளாஸ்டிக் பைகளும், 50 கிலோ உள்ள 8 உரசாக்கு மூட்டைகளும் ரோட்டில் கிடந்தது.

இந்த மூட்டைகளில் பொது விநியோகத் திட்ட அரிசி இருப்பது கண்டறியப்பட்டு அக்கம் பக்கத்தில் பொதுமக்களிடம் விசாரணை செய்ததில், யாருடையது என்று தெரியவில்லை. அரிசி மூட்டைகளை கைப்பற்றி திருவாடனை நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை