ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது

மதுரை, ஜூலை 26: மதுரை புட்டுத்தோப்பு மெயின்ரோட்டில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ முத்துராஜா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் சோதனையிட்டனர். அதில் தலா 45 கிலோ எடை கொண்ட 6 பாலித்தின் சாக்குகளில் சுமார் 280 கிலோ ரேசன் புழுங்கல் அரிசியை கடத்த முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில், மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ராஜேஸ்குமார்(46), மதுரை கே.கே.நகரை சேர்ந்த டிரைவர் கார்த்திக்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்