கோவை: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தனியார் செல்போன் நிறுவன அதிகாரி, சரவணம்பட்டி போலீசில் புகார் மனு அளித்தார். அதில், சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் எங்களது செல்போன் நிறுவனத்தின் இரும்பு டவர் மற்றும் சத்தி ரோட்டில் தனியார் கட்டிடத்தில் இருந்த ரூ.46.50 லட்சம் மதிப்பிலான டவர் மற்றும் உதிரிபாகங்களை காணவில்லை. செல்போன் டவர்களை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு இடங்களிலும், கடந்த 1999ல் செல்போன் டவர்கள் பொருத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் டவர்களின் பாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்துவிட்டதாக தெரிகிறது. டவர்கள் செயல்படாத நிலையில் திருட்டு நடந்திருப்பதாக தெரிகிறது. …