ரூ.29.50 லட்சம் உண்டியல் வசூல்

அழகர்கோவில், ஏப். 11: மதுரை அழர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பக்தர்களின் காணிக்கை ரொக்கமாக ரூ.29 லட்சத்து 50 ஆயிரத்து 747ம், தங்கம் 38 கிராமும், வெள்ளி 98 கிராமும் கிடைகத்தது. இப்பணியில் கோயில் துணை ஆணையர் ராமசாமி,
தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கோவில் கண்காணிப்பாளர்கள் பிரதீபா, சேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்