ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

 

ஈரோடு, ஏப். 24: சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்க வெப்பிலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,550 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.29.25க்கும், அதிகபட்ச விலையாக ரூ.30.25க்கும், சராசரி விலையாக ரூ.29.41க்கும் ஏலம் மூலமாக விற்பனையானது. மொத்தம் 630 கிலோ தேங்காய்கள் ரூ.18 ஆயிரத்து 911 என விற்பனையானது

Related posts

புகையிலை விற்றவர் கைது

சமயபுரம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 3 நாளாக மின்விநியோகம் நிறுத்தம்

ஈரோட்டில் சிறுவர்கள் ஓட்டி வந்த 3 பைக் பறிமுதல் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரை