சென்னை: தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: சிறு, குறு தானிய பயிர்களின் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்க”சிறுதானிய இயக்கம்” கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி பழங்குடியின விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறு தானியங்களுக்கென பதப்படுத்தும் மையமும் அமைக்கப்படும். …