ராஷ்மிகா முற்றுகை: மும்பையில் பரபரப்பு

மும்பை: கோயிலுக்கு சென்ற நடிகை ராஷ்மிகாவை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா நடித்துள்ள இந்தி படம் குட்பை. இதில் அமிதாபின் மகளாக ராஷ்மிகா நடித்திருக்கிறார். விரைவில் படம் வெளியாக உள்ளது. இது தனது முதல் பாலிவுட் படம் என்பதால், படத்தின் வெற்றிக்காக மும்பையிலுள்ள லால்பவுக்சா ராஜா கோயிலுக்கு ராஷ்மிகா நேற்று சென்றார். ராஷ்மிகா வருவதை அறிந்து, கோயிலுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் கூடிவிட்டது. ராஷ்மிகா வந்ததும் அவரை பார்க்க கூட்டம் முண்டியடித்தது. பலர் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் பாதுகாவலர்கள் வந்து ராஷ்மிகாவை மீட்டு அழைத்து சென்றனர். கோயிலில் விநாயகரை தரிசித்துவிட்டு திரும்பும்போதும் இதேபோல் கூட்டம் கூடியது. பின்னர் போலீசார் வந்து ராஷ்மிகாவை பத்திரமாக அழைத்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை