ராயனூர் அருகே கோயில் கேட்டை திருடியவர் கைது

கரூர், டிச. 19: கரூர் ராயனூர் அருகே கோயில் கேட்டை திருடி நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் ராயனூர் வசந்தம் நகரில் உள்ள மதுரை வீரன் கோயில் வளாகத்தில் இருந்த ரூ.15ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கேட்டை காணவில்லை என கோயில் நிர்வாகி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, கோயில் கேட்டை திருடியதாக தாந்தோணிமலையை சேர்ந்த திருச்சேஸ்வரன் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து இரும்பு கேட்டை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து