ராமேஸ்வரம், ஜூலை 24: ராமேஸ்வரம் பள்ளியில் மாணவர்களிடையே பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலுள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் பாலின சமத்துவம் மற்றும் உனக்கு நீயே ஒளி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அமிர்தா பள்ளிகளின் நிர்வாகி சுவாமினி பக்திபிரியா அமிர்த பிராணா தலைமை வகித்தார். அமிர்தா பள்ளி கல்வி அதிகாரி முரளிதரன் முன்னிலை வகித்தார்.
துவக்க நிகழ்வாக பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 2023 விதைப் பந்துகளை மாணவர்களுக்கு வழங்கி பாலின சமத்துவ நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பாலின சமத்துவம் குறித்த உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், பசுமை ராமேஸ்வரம் திட்டம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.