ராமேஸ்வரத்தில் 572 மதுபாட்டில்கள் பறிமுதல்: வாலிபர் கைது

 

ராமேஸ்வரம், செப். 16: ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சவுந்தரியம்மன் கோயில் தெருவிலுள்ள கேஸ் குடோன் அருகில் சாலையில் நகர் காவல்நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 572 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்கு மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராமேஸ்வரம் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்த அருள் மணிகண்டன் (21) என்பவரை கைது செய்தனர்.தப்பியோடிய கரையூர் வேர்கோடு பகுதியை சேர்ந்த குமரகுரு(29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை