ராமநாதபுரம் பகுதியில் பலத்த மழை

 

ராமநாதபுரம், அக்.25: ராமநாதபுரம் நகர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பரவலாக கடந்த வாரம் முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.சில இடங்களில் மேகமூட்டமாகவும் காணப்பட்டும், பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் நகர் பகுதியிலான அரண்மனை, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை, பேராவூர், பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டிணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது.

இதனால் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் மழையினால் ராமநாதபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் ஆங்காங்கே சாலையின் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி