ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம், மே 20: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்கள், குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து வரும் 26ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அரசு துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள இருகின்றனர். மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து