ராமநாதபுரத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைச்சர் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், செப். 21: ராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை சாலையில் புதிய ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று திறந்து வைத்தார். ராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் திறப்பு விழா இன்று காலை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர், கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு புதிய பாலத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் யூனியன் சேர்மன் பிரபாகரன், நகராட்சி சேர்மன் கார்மேகம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் வெற்றிவேல் ராஜன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி