ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி விவசாயிகள், பரமக்குடி நகராட்சி ஆணையர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் கோரிக்கையினை ஏற்று, இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் தேவைக்காக வைகை ஆற்றின் படுகையை நனைக்கும் வகையில் வைகை அணையிலிருந்து இன்று முதல் 5 நாட்களுக்கு, 1000 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது….