ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ராணிப்பேட்டை: தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரு கரையோரங்களிலும் உள்ள 30 கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1724 கனஅடி உபரிநீர் பாலாற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ கூடாது. கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. …

Related posts

மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம்

திருப்போரூர் அருகே டாம்ப்கால் மருந்து நிறுவனத்தில் தீ விபத்து

கம்பம் அருகே மகாத்மா காந்திக்கு ஆலயம் அமைத்து வழிபடும் மக்கள்