ஓமலூர்: ராஜேந்திர பாலாஜி மீது எந்த தவறும் கிடையாது. அவர் மோசடி எதுவும் செய்யவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுகவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: ராஜேந்திரபாலாஜி எந்த தவறும் செய்யவில்லை. மோசடி செய்ததற்கு உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர்மீது புகார் கொடுத்தவர்கள், உரிய ஆதாரங்களை கொடுத்திருக்கிறார்களா? என்று பார்க்காமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்….