ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

சென்னை: குரோம்பேட்டையை சேர்ந்தவர் மவுலி. இவரது மனைவி சுனிதா(45). சுனிதாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த மாதம் 22ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று சுனிதாவிற்கு உணவு கொடுத்துவிட்டு மவுலி வீட்டு சென்றுவிட்டார். பின்னர், 23ம் தேதி காலை மனைவி சிகிச்சை பெறும் வார்டிற்கு சென்று பார்த்தபோது சுனிதா அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கடந்த 31ம் தேதி பூக்கடை காவல்நிலையத்தில் மவுலி புகார் அளித்தார். இந்தநிலையில், நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 8வது மாடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து, மவுலியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பூக்கடை போலீசார் காண்பித்தனர். அப்போது, இறந்தது தன்னுடைய மனைவி தான் என்று மவுலி கூறியுள்ளார். அவர் எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்