ராஜபாளையம் அருகே தலை துண்டித்து பெண் கொலை? கிணற்றில் சடலம் மீட்பு

 

ராஜபாளையம், ஆக.19: ராஜபாளையத்தில் கிணற்றில் தலை இல்லாமல் பெண் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே நக்கனேரி கிராம விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகராஜ் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

பச்சை நிற புடவையுடன், தலை இல்லாமல் சடலம் கிடந்தது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் மிகவும் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்த பெண் யார், அவர் எப்படி இறந்தார், தலை துண்டித்து கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்