ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 85 வயது மூதாட்டி மீட்பு

நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது தாயார் பாவாய் (85). இவர் நேற்று காலை வழக்கம் போல் விவசாயத் தோட்டத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தவறி, அருகில் இருந்த கிணற்றினுள் விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக அங்கு வந்த ராமசாமி, கிணற்றில் தாய் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் அரை மணி நேரம் போராடி, மூதாட்டியை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். கிணற்றில் தவறி விழுந்ததில் லேசான காயமடைந்த மூதாட்டியை, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்து மூதாட்டியை உயிருடன் மீட்ட தியணைப்பு வீரர்களை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்….

Related posts

நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்.

இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் கிளை காட்டம்