திருப்புத்தூர், ஜூன் 21: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா கீழச்சிவல்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றழ, விழாவிற்கு மாவட்ட பொருளாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்வமணி முன்னிலை வகித்தார். நகர் தலைவர் அழகு மணிகண்டன் வரவேற்றார். நகர் நிர்வாகிகள் பொதுமக்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
விழாவில் வட்டார செயலர் வெள்ளைக்கண்ணு, தொழிற்சங்க வட்டார தலைவர் விஸ்வநாதன், பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் காந்தி, நகர் துணைத் தலைவர் மாமுண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர் அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் பழனிவேல்ராஜன் நன்றி கூறினார்.