ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பு: காங்கிரஸ் கண்டன கூட்டம்

காரைக்குடி, ஏப்.13: காரைக்குடி அருகே கல்லலில் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்.பி பதவியை நீக்கிய பாஜக அரசை கண்டித்து கண்டன கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் இருதயராஜ் வரவேற்றார். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர், முன்னாள் எம்எல்ஏ கேஆர்.ராமசாமி தலைமை பேசுகையில், ராகுல் காந்தி எம்.பி பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். நிச்சயம் நாம் தான் வெற்றி பெறுவோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்றார்.

மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்எம்,பழனியப்பன், ஒய் பழனியப்பன், முன்னாள் நகர தலைவர் சிவானந்தம், அன்டக்குடி கதிரவன், தேவகோட்டை நகர தலைவர் லோகநாதன், கண்ணங்குடி வட்டார தலைவர் ராஜ்மோகன், சொர்ணம் சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திருமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் சாத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை